யாழ்- நீர்வேலியில் “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” எனும் திட்டத்தை மின்சக்தி எரிபொருள் அமைச்சரால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிற்காக முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டத்தால், இலங்கையின் விவசாயத் துறையில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்த முடியும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.குறித்த திட்டத்தின் அடிப்படையில், விவசாய நடவடிக்கைகளிற்காக சலுகை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படவுள்ளது.இந் நிகழ்வில், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதி அமைச்சர் அஜித் பெரேரா, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்