நீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் இவ் வருடத்திற்கான பரிசளிப்பு விழா ஆடி (July) மாதம் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை முதல்வர் திரு. சி. தர்மரத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. அ. அகிலதாஸ் அவர்கள் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி முகாமைத்துவம், யாழ் கல்வி வலயம்) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சிவநேசன் அவர்களும் செல்வி. நா. கலைவேணி அவர்களும் (பழைய மாணவி, கணக்காளர், மாவட்டச் செயலகம், கிளிநொச்சி) கலந்து கொள்ளவுள்ளனர். கௌரவ விருந்தினராக திரு. த. ரமேஷ் அவர்கள் (பழைய மாணவன், இலண்டன்) கலந்துகொள்ளவுள்ளார்.