சொற்பொழிவின் ஐந்தாம் நாள்


நீா்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையாா் ஆலய மகோற்சவகாலச் சொற்பொழிவின் ஐந்தாம் நாளாகிய இன்று அரசகேசரி அமைத்த ஆலயம் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபா் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் சொற்பொழிவாற்றினாா். அத்தியாா் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபரும் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய இ.குணநாதன் அவா்கள் இணைப்பாளராகச் செயற்பட்டு நிகழ்வை நெறிப்படுத்தினாா். அதிக எண்ணிக்கையான இளையோா்கள் கலந்து கொண்டனா். நாற்பதுக்கு மேற்பட்டோா் சொற்பொழிவின் இறுதியில் நடைபெற்ற போட்டியில் பரிசில்கள் பெற்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *