வலி கிழக்கு பிரதேச சபை சபையின் அனுமதியுடன் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து பருத்தித்துறை வீதி வரை செல்லும் ”ஸ்ரீ அரசகேசரிப்பி்ள்ளையார் கோவில் வீதியானது ஊர்ப்பிரமுகர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதியினை பிரதேச சபை அமைத்திருந்தது. ஆனால் பெயர்ப்பலகைக்கான செலவை திரு.கந்தசாமி கிருபாகரன் (கரன் ஜீவல்லேர்ஸ் – யாழ்ப்பாணம்) அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.