அருள்மிகு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத் திருவிழா தொடங்கி மகோற்சவம் முடியும் வரை தொடர் சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. தினமும் சொற்பொழிவு முடிவில் மாணவர்களிடம் வினாக்கள் கேட்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன, பரிபாலசபையினரதும் பிரதம குரு சிவஸ்ரீ சா.சோமதேவக்குருக்களதும் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
மூன்றாம் நாள் இரவு திருவிழாவின் போது சிவஸ்ரீ. தி. மயூரகிரி சர்மா அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது.
தினமும் பிற்பகல் 6.00 – 7.00 வரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. மாணவர்களை இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
One Comment on “அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில் நடைபெற்று வரும் தொடர் சொற்பொழிவு – நாள் 3”