அமரர் சரஸ்வதி பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவாக வழங்கப்படும் புலமைப்பரிசில்

அமரர் சரஸ்வதி பாலசுப்பிரமணியம் (அத்தியார் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் அத்தியார் அருணாசலம் அவர்களின் மருமகள்) அவர்களின் நினைவாக அவர்களின் மகன் திரு. பாலசுப்பிரமணியம் மனோகரன் அவர்களினால் மாதாந்தம் வழங்கப்படும் 2000 ரூபாய் உதவிப் பணம் இன்று மாணவிக்கு திரு. இ. குணநாதன் (முன்னாள் அதிபர், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தியார் இந்துக் கல்லூரியில் க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று தொடர்ந்து பாடசாலையில் கற்கின்ற , இணை பாட விதான செயற்பாடுகளில் ஈடுபடும், ஒழுக்கமுள்ள, வறிய மாணவர் ஒருவர் வருடந்தோறும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பழைய மாணவர் சங்கத்தின் சிபார்சின் படி அவர்களுக்கு உயர்தரம் கற்கும் 2 வருடங்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா உதவிப் பணம் வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் சென்ற வருடம் தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு (செல்வி பாஸ்கரன் டிலக்சனா) இன்று உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதே போல் அடுத்த வருடங்களிலும் இப் புலமைப் பரிசில் தொடர்ச்சியாக வழங்கப்படும் என பாலசுப்பிரமணியம் மனோகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *